என் கதை முடியும் நேரம் இது ...

என் கதை முடியும் நேரம் இது
என்பதை சொல்லும் ராகம் இது

அன்பினில் வாழும் உள்ளம் இது
அனையே இல்லா வெள்ளம் இது

இதயத்தில் ரகசியம் இருக்கின்றது
அது இதழ்களில் பிறந்திட தவிக்கின்றது
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது, அதில்
உறவென்று அவளை நினைக்கின்றது ...

பேதைமை நிறைந்தது என் வாழ்வு, அதில்
பேதையும் வரைந்தது சில கோடு
விட்டென்று சிரிப்பது உள் நினைவு, அதன்
விட்டொன்று போட்டது அவள் உறவு ...

உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே, அதில்
பிரிவுகள் என்பதே இருக்காதே
ஒளியாய் தெரிவது வெறும் கனவு, அதன்
உருவாய் எரிவது என்மனது...

இரயில் பயணத்தில் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்...

No comments: