எந்தன் பாடல்களில் நீ நிலாம்பரி ...

கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே ...
நினைவென்னும் சோலைகுள் பூத்திட்ட அரும்பே

எந்தன் பாடல்களில் நீ நிலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்கதடி ...

வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலர்
நிலவளால் தங்கையென உன் ஜொலிப்பு சொல்லுடி வைர சிலையே ...

பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுடி அம்மம்மா

பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நாண செய்கை செய்தாய்

வைகைபோல் நாணத்தில் நனைகின்றேனே
வைகை நீ என்றுன்னை சொல்கின்றேனே ...

பச்சை அரிசி எனும் பற்கள் கொண்ட உன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகுதடி உன் நினைப்பு ...

வார்த்தை தென்றல் நீ வீசும் போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் ஜில் என்று நனைகின்றது
சிந்தும் தேன் கூட சிந்தொன்று புனைகின்றது ...

No comments: