அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் இறுக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்த்துவிட்டேன் ...

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலை கோதி...
காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்...
கையோடுதான் கைகோர்த்து நான்
உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்...
வேறென்ன வேண்டும் உலகத்திலே...
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்த்துவிட்டேன் ...

நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே ...
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்.
உன் சீண்டலில் என் தேகத்தில்
புது ஜென்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்.
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்த்துவிட்டேன் ...

No comments: